states

img

ஆந்திரா - ஆற்றில் அரசு பேருந்து கவிழ்ந்து 9 பேர் உயிரிழப்பு  

ஆந்திராவில் ஆற்றில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.  

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஜங்கரெட்டிகூடம் பகுதியில் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஜல்லேறு கால்வாயில் கவிழ்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் 26 பேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து இந்த விபத்தில் மாயமான மற்றவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினரும், தீயணைப்புத் துறையினரும் தீவீரமாக ஈடுபட்டுள்ளனர். 

;